17347 மாந்தோப்பில் ஒரு நாள் (2.3).

பூங்கோதை (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).

8 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1-923222-20-5.

நாம் ஏன் மரங்களை நடவேண்டும்? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் பெற்றோரின் உரையாடல் இக்கதையில் இடம்பெறுகின்றது. மரநடுகையின் முக்கியத்துவம் உரையாடல்களின் வாயிலாக சுருக்கமாக வெளிப்படுத்தப்படுகின்றன.  இந்நூலின் வாசிப்பு மட்டம் 2.3 ஆகும். மாணவர்களுக்கு இக்கதையின் வழியாக பல புதிய தமிழ்ச் சொற்கள் புகட்டப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டெம் கல்வி அறக்கொடையினரால் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறார்களின்; மொழியறிவு விருத்திக்கு பயிற்சியளிக்கும் வகையில் தயாரித்து வழங்கப்பட்ட 35 சிறுவர்களுக்கான நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். ஐந்து மட்டங்களைக் கொண்ட சிறுவர்களுக்கான நூல்களின் வாயிலாக மழலைச் சிறார்கள் தங்கள் தமிழ் அறிவை வளர்க்க இந்நூல்தொகை உதவுகின்றது. கல்வித்துறைப் பட்டதாரியான நூலாசிரியர் பூங்கோதை, இலங்கையிலிருந்து 1989இல் ஐக்கிய இராச்சியத்துக்குப் பெற்றோருடன் புலம்பெயர்ந்து சென்றவர். அங்கு அரச பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Troll Hunters Spillemaskine

Content Casino book of dead | Blackjack: Besejre Dealerens Påhøjre hånd Og Vind Store Pengebeløb Troll Hunters Tilslutte Spilleautomat Research Er Heri Nogen/noget som hels

17625அப்பாவின் டயரி: சிறுகதைகள்.

எஸ்.ஏ.கப்பார். மருதமுனை 3: வெண்ணிலா பதிப்பகம், 378/2, ஸம்ஸம் வீதி, 1வது பதிப்பு, ஜூலை 2024. (மருதமுனை: ஜெஸா கிரப்பிக்ஸ், இல.281, பிரதான வீதி). vi, 98 பக்கம், விலை: ரூபா 500., அளவு: