க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
32 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 29×21 சமீ.
‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 199ஆவது இதழாக 20.04.2023இல் வெளிவந்த ஈழத்து அரசியல் நாவல்கள் சிறப்பிதழின் இரண்டாம் பாகத்தில் குணா கவியழகனின் ‘நஞ்சுண்ட காடு’-ஒரு பார்வை (சு.குணேஸ்வரன்), செங்கை ஆழியானின் மனக்குமுறல் ‘ருத்திர தாண்டவம்’ நாவல் (இன்பமகன்), எண்பதுகளின் ஆவணம் ‘பார்த்தீனியம்’ (இ.சு.முரளிதரன்), தமிழ்க் கவியின் ‘ஊழிக்காலம்’ (த.அஜந்தகுமார்), போர் தின்ற வாழ்வின் ஒரு தெறிப்பே ‘நடுகல்’ (தி.செல்வமனோகரன்), ஒரு போராளியின் தன் வரலாறாக சாந்தி நேசக்கரம் படைத்த ‘உயிரணை’ நாவல் (சிவ.ஆரூரன்), மு.பொன்னம்பலம் எழுதிய ‘சங்கிலியன் தரை’ நாவல் (வரதன் குமார்), சிதைவுறும் வாழ்க்கை: ‘கொரில்லா”வால் நட்சத்திர அடிக்குறிப்பெழுதல் (ந.மயூரரூபன்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.