17479 ஜீவநதி: வைகாசி 2023: அல் அஸுமத் சிறப்பிதழ்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மே 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

44 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 29.5×20.5 சமீ.

‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 202ஆவது இதழாக 20.05.2023இல் வெளிவந்த இவ்வாளுமைச் சிறப்பிதழில் ஒரு தனி அநுபவ முத்திரை பெற்றிருக்கும் அல் அஸூமத் சிறுகதைகள் (ஈழக்கவி), அல் அஸூமத் எழுதிய இஸ்லாமிய நூல்களும் மொழிபெயர்ப்பு நூல்களும்-எனது பார்வை (அஷ்ரஃப் சிஹாப்தீன்), அல் அஸூமத் கவிதைகளில் சமூகம் (சி.ரமேஷ்), புதுமைப்பித்தனின் அந்தராத்மா-சிறுகதை (அல் அஸூமத்), அல் அஸூமத்தின் ‘வெள்ளைமரம்’ சிறுகதைத் தொகுப்பு (அ.யேசுராசா), யாப்புக் குறித்த அறிவை நல்கும் அற்புதமான நூல் ‘யாப்பியலுரை ஆய்வுடனான ஒரு விளக்கம்’ (இ.சு.முரளிதரன்), கல்லறை நிலவு (கவிதை-அல் அஸூமத்), அல் அஸூமத்தின் வெளியீட்டு முயற்சிகள் (ஜவாத் மரைக்கார்), அல் அஸூமத் உடனான நேர்காணல் (பரணீதரன்), ‘ஆயன்னையம்மாதாய்’ கசப்பான பல உண்மைகளின் கூட்டு விம்பம் (கந்தர்மடம் அ.அஜந்தன்), அல் அஸூமத்தின் இரு நெடுஞ்சிறுகதைகள் (ஜெயபிரசாந்தி ஜெயபாலசேகரம்), தம்பீ, மலையாண்டி (கவிதை-அல் அஸூமத்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. மாத்தளை நகருக்கு அருகிலுள்ள ‘திக்கிரியா’ என்ற ரப்பர் தோட்டத்தில் 22.11.1942இல் பிறந்த பொன்னையா வேலாயுதம் என்ற இயற்பெயர் கொண்ட இவரது புனைபெயரே ‘அல் அஸூமத்’  என்பதாகும். பின்னாளில் அதனையே தனது இயற்பெயராகப் பதிவுசெய்துகொண்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்