17569 பிறகு கதைக்கிறேன்: இன்னும் காத்திருக்கும் (க)விதைகள்.

சுப்பிரமணியம் ஜெயசீலன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

104 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-11-9.

காதலின் உணர்வுகளால் பிரசவிக்கப்பட்ட இக்கவிதைத் தொகுதியில் கவிஞர் ஜெயசீலன் காதலின் கற்பனையையும், காதல் தோல்வியின் நிஜமுகத்தையும் சித்திரமாகத் தீட்டியிருக்கிறார். ‘முகநகை கொய்தாள்’ என்ற கவிதையில் தொடங்கி, ‘எல்லோருக்கும் நன்றிகள்’ ஈறாக 34 ஆக்கங்களை இந்நூலில் காணமுடிகின்றது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 387ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

13255 மூலமந்திர யந்தரங்களும் பூஜாவிதியும் அடங்கிய மலையாள மாந்திரீக வராகிமாலை.

எ.நடேச தம்பிரான். கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1957. (கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை). 108 பக்கம், விளக்கப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 1.40, அளவு: 17.5×12 சமீ. அம்பிகையிடம்

12577 – விளங்கிக் கொண்டு கருத்து வெளியிடுதல் -1: மேலதிக மொழி விருத்திப் பாடநெறிதமிழ்.

தேசிய கல்வி நிறுவகம். கொழும்பு: தொலைக்கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1997. (கொழும்பு:P and A பிரின்டர்ஸ் லிமிட்டெட்). 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ. மூன்று