17769 குளக்கோட்டன் சித்திரம்.

கனகசபாபதி சரவணபவன். திருக்கோணமலை: திருகோணமலை வெளியீட்டாளர்கள், 346, அன்புவழிபுரம், 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

80 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5  சமீ., ISBN: 978-955-38500-1-0.

வரலாற்று இயக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் வரலாற்றுப் புனைவுகளை எழுதிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் இந்நூல் எழுத்தாளர் சரவணபவனால் எழுதப்பட்டுள்ளது. குளக்கோட்டன் என அழைக்கப்படும் சோழகங்கன் கோணேஸ்வர ஆலயப் புனரமைப்புப் பணிக்காக தந்தை வரராமதேவரால் மதுரையில் இருந்து திருக்கோணமலைக்கு அனுப்பப்பட்டவர். அவரது வருகைக்காலம் குறித்து வரலாற்றாய்வாளரிடையே ஒருமித்த முடிவு இன்னும் எட்டப்படவில்லை. எனினும் ’கோணேசர் கல்வெட்டு என்னும் இலக்கிய வடிவம் 12ஆம் நூற்றாண்டுக்குரியதாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகின்றது. இப்புனைவானது அக்காலச் சமூகச் சூழலைக் கருத்தில் கொண்டு நாககன்னி, காயத்ரி, சம்பந்தர், காடுசூழ் பயணம், கந்தளாய், சதுர்வேதி மங்கலம், மறுநாள், குளம் அமைத்தல், குசவர் மேடு, திட்டமிடல், பொன்னி, குளப்பலி ஆகிய பன்னிரு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

15406 விலாசம்: தமிழ் நாடக வகை ஒன்று பற்றிய ஆய்வு.

சி.மௌனகுரு (ஆசிரியர்), சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்), சி.முருகவேள் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, நவம்பர் 1984. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை). பக்கம் 15-32, விலை:

10034 காரைநகர் மணிவாசகர் சபை பவளவிழா மலர்: 1940-2015.

மு.சு.வேலாயுதபிள்ளை (மலராசிரியர்). காரைநகர்: பவளவிழா மலர்க் குழு, மணிவாசகர் சபை, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறின்டேர்ஸ், இல. 681, காங்கேசன்துறை வீதி). xxii, 246 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,