17911 பேராசிரியர் கலாநிதி ஆ.சதாசிவம் அவர்களின் நினைவுமலர்.

நினைவு மலர்க் குழு. கொழும்பு 6: திருமதி திருஞானேஸ்வரி சதாசிவம், 11, சின்சபா வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜுலை 1988. (கொழும்பு 6: ஜெயா ஓப்செட் பிரின்டர்ஸ்).

72 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

யாழ்ப்பாணம் அராலியைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தமிழ்ப் பேராசிரியர் அமரர் கலாநிதி ஆறுமுகம் சதாசிவம் (15.02.1926-01.07.1988) அவர்களின் நினைவுமலர். பேராசிரியர் சதாசிவம் மெய்க்கீர்த்திப் பனுவல் (த.கனகரத்தினம்), ஓராதவனை இழந்தோம் நாம் (சந்தனா நல்லலிங்கம்), ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் நூலுக்கான சிறப்புப் பாயிரம் (புலவர் பாண்டியனார்), உய்ப்பித்த உத்தமன்-கவிதை (துரை சிவலிங்கம்), நினைவிலே நிற்கும் பேராசிரியர் (ஆ.வேலுப்பிள்ளை), அன்பும் எளிமையும் மிக்க அறிஞர் (க.இ.க.கந்தசாமி), மாறாத இன்முகத்தான் மகத்தான உழைப்பாளி- ஒரு நினைவுக் குறிப்பு (கார்த்திகேசு சிவத்தம்பி), தமிழ் உலகுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கின்றது (க.கனகராசா), மறைந்த பேராசிரியர் சில மனப் பதிவுகள் (துரை. மனோகரன்), என் நினைவு அலைகளில் பேராசிரியர் (ஆர்.சிவகுருநாதன்), மொழிநூல் வல்லுநர் (வை.கனகரத்தினம்), A Great loss to Sumerian Studies (Ashley Halpe), From the Senate of the University of Peradeniya (A.P.R.Aluvihare), A Friend Indeed (Bertram Bastiampillai), An Academian and Philosopher (Emil A.Wijewanta), We are left with the Thought (S.Thillainathan), A Reputed Scholar (J.M.Gunadasa),  A Good Scholar (J.B.Disanayake),  A Revered Teacher (R.Paskaralingam), As Chief Examiner (Arthur Wedamalla), A Promoter of Peace through Religion (L.G.Hewage), A Genial Soul (G.D.Wijayawardhana), A Schlor, A Hard Worker and  My Teacher (A.Sanmugadas), Events and Achievements,  பேராசிரியர் ஆ.சதாசிவம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் ஆகிய ஆக்கங்கள் இந்நினைவுப் பதிகையில் இடம்பெற்றுள்ளன. 

ஏனைய பதிவுகள்