12979 – பபிலானியாவில் இயேசுவும் தமிழர்களும்.

A.E.C.இராசரெத்தினம். வவுனியா: A.E.C.இராசரெத்தினம், 154, குட்செட் வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (வவுனியா: அமைதி அச்சகம், 154, குட்செட் வீதி).

83 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19 x 14 சமீ.

இந்நூலாசிரியர் இயேசுவுக்கும் தமிழருக்கும் இடையில் இருந்த ஆதித் தொடர்பினை நிரூபிக்க முயன்றுள்ளார். தமிழருக்கு முருகன் போன்று, பபிலோனியாவில் இயேசு குலதெய்வமாக இருந்தார் என்கிறார். கலாநிதி தாவீது அடிகளாரும், ஞானப்பிரகாச அடிகளாரும் இதைக் கூறியுள்ளதாகப் பதிவுசெய்யும் இவ்வாசிரியர், தமிழைப்போன்ற திராவிட மொழியான ‘எலு’, அம்மொழியைப் பேசிய ஈழவர் அகதிகளாகப் பரவிப் புலம்பெயர்ந்தமையினால் அழிந்து விட்டது என்கிறார். இலங்கையில் விஜயனின் வருகையும் பபிலோனியாவின் வீழ்ச்சியும் ஒரே ஆண்டில் நடைபெறுகின்றது என்பதால் இலங்கைத் தமிழரின் பூர்வீகம் பபிலோனியா எனக் கூறுகின்றார். விஜயனையும் அவனது நண்பர்களையும் பபிலோனியாவிலிருந்து புலம்பெயர்ந்து இலங்கை வந்த தமிழர்களாக நிறுவ முனையும் ஆசிரியர் ஈழவர் மொழி ‘எலு’ என்பதை ஏற்பதன் மூலமே இதனை நிரூபிக்கலாம் என்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50051).

ஏனைய பதிவுகள்

14785 பாதி உறவு: குறுநாவல்.

பார்த்திபன். ஜேர்மனி: தென்னாசிய நிறுவனம், Sud Asien Buro Kiefern str. 45, 5600, Wuppertal -2, West Germany, 1வது பதிப்பு, ஜுலை 1987. (கல்லச்சுப் பிரதி). 92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

12245 – இலங்கை மத்திய வங்கி: பொருளாதார நிலை 1997.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, இல.30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (கொழும்பு: இலங்கை மத்திய வங்கி அச்சகம்). (6), 89

12849 – வள்ளுவம் வழங்கும் தமிழர் தத்துவம்.

க.கணேசலிங்கம். சென்னை 600 090: க.கணேசலிங்கம், 21 (9/2), பீச் ஹோம் அவென்யூ, பெசென்ட் நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (சென்னை 5: மாசறு D.T.P,2, பார்த்தசாரதி தெரு, திருவல்லிக்கேணி). 144 பக்கம்,

14146 நல்லைக்குமரன் மலர் 1999.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 1999. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). (6), 137 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

12859 – வில்லிபுத்தூராழ்வார் அருளிச்செய்த மகாபாரத மூலம்.

வில்லிபுத்தூராழ்வார் (மூலம்), ந.ச.பொன்னம்பலபிள்ளை (புத்துரை). யாழ்ப்பாணம்: வீ.நாராயணசுவாமி நாயுடு இணை வெளியீடு, மு.மூத்ததம்பிச் செட்டியார், 1வது பதிப்பு, ஜுலை 1886. (யாழ்ப்பாணம்: மெய்ஞ்ஞானப்பிரகாச யந்திரசாலை, வண்ணார்பண்ணை). 320 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24