தமிழ்மொழி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
100 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-12-6.
ஒவ்வொரு மனிதனும் தனது மன உணர்வுகளை வெளிப்படுத்த தான் வாழும் சூழலும் அது தந்த பாடங்களும் காரணமாகிவிடுகின்றன. அந்த மனவெளிப்பாடே கதைகளாகவும், கவிதைகள், நாவல்களாகவும் கட்டுரைகளாகவும் உருப்பெறுகின்றன. அந்த வகையில் இந்நூலின் சொந்தக்காரியான தமிழ்மொழி, இன விடுதலைப் போராளியாக தன் மக்களுக்கான பணியைச் செய்தவர். இன்றும் தன்னைச் சூழவுள்ளவர்களுக்காக வாழ்பவராகவும், சிந்திப்பவராகவும் வாழ்வதுடன் ஒரு மனித நேயச் செயற்பாட்டாளராகவும் திகழ்கின்றார். தன்னைச் சூழ உள்ளவர்களின் மன எண்ணங்களை மேம்படுத்தும் நோக்கில் இக்கவிதைகளை எழுதியுள்ளார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 419ஆவது நூலாக வெளிவந்துள்ளது.