14622 நா இடற வாய்தவறி.

காத்தான்குடி பாத்திமா (இயற்பெயர்: பாத்திமா முஹம்மட்). காத்தான்குடி: வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான பெண்கள் அமைப்பு, WEDF, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2009. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185V, திருமலை வீதி). 50 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18×12.5 சமீ. கிழக்கிலங்கையின் காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் கலாபூஷணம் பாத்திமா முஹம்மட். அரச முகாமைத்துவ உதவியாளராக முப்பதாண்டுகாலம் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தன் மன உணர்வுகளின் குவியல்களாக இக்கவிதைத் தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். ஏற்கெனவே அத்தனையும் முத்துக்கள் (2003), பொய்த் தூக்கங்கள் (2004) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டவர். இது இவரது முதலாவது கவிதைத் தொகுப்பாகும். இதில் அந்த இளமைக்காலம், இதுவும் ஒரு வாய் தவறி, இதுவொரு பிதற்றல், நா இடற வாய்தவறி, அன்பான மகனுக்கு, இளமைக்கு என்னாச்சு?, மனசாட்சியே மறுத்துவிடு, அவனுக்கென்று, உடன்பிறப்பென்று, நானும் நீயும், எழுத்தாளன் மட்டுமே, நீயும் நானும், இலக்கியவாதி, கனவுகள் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

12396 – சிந்தனை: தொகுதி I இதழ் 1 (பங்குனி 1983).

சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்), சி.முருகவேள் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 1983. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 430, காங்கேசன்துறை வீதி). 100 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா

14252 இளைஞர் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை.

லக்ஷ்மன் ஜயத்திலக்க (ஆணைக்குழுவின் தலைவர்). கொழும்பு 3: இளைஞர் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழு, கிராமோதய நிலையம், 152, காலி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1990. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). xviii,

12708 – தமிழில் நாடகம்: கட்டுரைத் தொகுப்பு.

பாலசுகுமார். மட்டக்களப்பு: அனாமிகா வெளியீடு, 54, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை). (44) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14 சமீ.

14286 நாங்கள் யார்?

சிபில் வெத்தசிங்க. மொரட்டுவ: சிறுவர் உரிமைகள் கருத்திட்டம், சர்வோதய சட்டசேவை இயக்கம், தம்சக் மந்திர, 98, ராவத்தாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2001. (மொரட்டுவை: விஷ்வலேகா அச்சகம்). (12) பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

13A16 – திருவாதவூரடிகள் புராணம்.

கடவுள் மாமுனிவர் ( மூலம்), ம.க.வேற்பிள்ளை (விருத்தியுரை). ம.வே.திருஞானசம்பந்தப் பிள்ளை (பதவுரை). யாழ்ப்பாணம்: சி.சி.சண்முகம்பிள்ளை, அதிபர், சண்முகநாதன் புத்தகசாலை, வண்ணார்பண்ணை, 3வது பதிப்பு, ஆடி 1931, 1வது பதிப்பு, 1895, 2வது பதிப்பு, 1915.

14719 வந்தனா.

நீர்வை பொன்னையன். கொழும்பு 6: இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம், 18, 6/1, கொலிங்வுட் பிளேஸ், 1வது பதிப்பு, மார்ச் 2019. (கொழும்பு 6: R.S.T. என்டர்பிரைசஸ், 114, W.A.சில்வா மாவத்தை). 110