8053 அக ஒளி: வாழ்வியல் வசந்தங்கள் பாகம் 13.

பருத்தியூர் பாலவயிரவநாதன். கொழும்பு 6: வானவில் வெளியீட்டகம், மேரு இல்லம், 36-2/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்).

153 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955- 0469-14-7.

பருத்தியூர் பாலவயிரவநாதனின் கருத்து வினைப்பாடுகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக வாழ்வியல் வசந்தங்கள் என்ற நூல்வரிசையில் உள்ள 18 நூல்களும் அமைகின்றன. தினக்குரல் பத்திரிகையில் தொடராக வெளிவந்த இக்கட்டுரைகள், பாரம்பரியப் பண்பாட்டுத்தளத்தில் நின்று சமகாலத்து வாழ்க்கைக்குரிய எடுத்துரைப்புகளாக அமைகின்றன. இத்தொகுதியில் பக்தி, அறிவும் அனுபவங்களும், அர்ப்பணிப்பு, இல்லை, எதற்கும் தயாரா? நம்பிக்கைகள், வேற்றுமைகள், கர்வம், அகஒளி, பெண்களுக்கு எதிரான உடல்ரீதியான வன்முறைகளும் வசைப்படுதலும், குழந்தைகளும் குறும்புத்தனங்களும், இவைதான் உண்மைகள், அழகை மட்டும் முதன்மைப்படுத்தலாமா?, உறவுகளைப் பிரிக்கமுயலும் வஞ்சகர்கள், ஓடிப்போனவள்: பெண்கள் நிலை பற்றிய சமூகப் பார்வை, முதமையிலும் காதல் வாழ்வுஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 16 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பாலகிருஷ்ணன் வயிரவநாதன் பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் தன் கல்வியைப்பெற்றவர். இந்து சமய கலாசாரப் பணிமனையில் நிர்வாக அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

ஏனைய பதிவுகள்