வயலற் சரோஜா. (இயற்பெயர்: வயலற் சந்திரசேகரம்). மூதூர் 04: வானவில் வெளியீட்டகம், 672, நொக்ஸ் வீதி, 1வது பதிப்பு, 2012. (திருக்கோணமலை: அஸ்ரா பிரிண்டர்ஸ், 43 திருஞானசம்பந்தர் வீதி).
148 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×15 சமீ.
உளவளத்துணை நூலான இந்நூலில் இடம்பெற்றுள்ள 22 கட்டுரைகளும் மனித மேம்பாடு சார்ந்தவை. நான் யார்? சமூகத்திலுள்ள ஒவ்வொருவரது பாத்திரமும் என்ன? வாழ்வில் சிறக்க நாம் என்ன அணுகுமுறையைப் பின்பற்றவேண்டும்? எம்முள்ளே ஆளுமையை வளர்த்து சமூகத்தில் ஏற்புடையவனாக என்னை மாற்றிக்கொள்வது எப்படி? என்பன போன்ற கேள்விகளுக்கு இக்கட்டுரைகள் பதிலளிக்கின்றன. இந்நூலின் மேலட்டைத் தலைப்பில் வாழ்க்கையை வளமாக்க வழி என்ன? என்று குறிப்பிடப்பட்டுள்ளது.