கா.வைத்தீஸ்வரன். தெகிவளை: ஆற்றுப்படுத்தல் நிலையம், 7, அல்பேட் பிளேஸ், 1வது பதிப்பு, பெப்ரவரி 2011. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).
152 பக்கம், விலை: ரூபா 270.00, அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-97577-3-3.
இன்று போர் அநர்த்தங்களால் ஏற்பட்ட நெருக்கீடுகளாலும், புலம்பெயர்வுகளாலும், சுநாமி, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அநர்த்தங்களாலும் ஏற்பட்ட இழப்புகளால் அல்லலுற்று, தனிமையில், முதுமையில், வறுமையில், துணையின்றி மனநலம்குன்றி இருக்கும் எம்மவரின் மனவளத்தையும், உடல் வளத்தையும் ஒருசேர வளம்படுத்தவல்ல வழிகாட்டல்களை இந்நூல் 21 இயல்களில் வழங்குகின்றது. உண்மைச் சம்பவங்கள் (Case Studies) பல இக்கட்டுரைகளுக்கு பின்புலமாக அமைகின்றன.