12762 – நானிலம்: கலாசார விழா சிறப்பு மலர் 1997.

மலர் வெளியீட்டுக் குழு. செங்கலடி: கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், ஏறாவூர்ப்பற்று, 1வது பதிப்பு, 1997. (மருதமுனை: இளம்பிறை ஓப்செற்).

81 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25 x 18.5 சமீ.

ஏறாவூர்பற்று பிரதேச கலாசாரப் பேரவையினரால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் கலாசார விழாவின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர். கலாசார கீதம், முகம் தொலைந்த ஊரில் (கவிதை), கனவு மனிதர்கள் (சிறுகதை), பாடசாலை ஓர் பண்பாட்டு நிறுவனம் (கட்டுரை), வளர்க கலாசாரம் (கவிதை), சிவதொண்டன் நிலையக் கால்கோள், கொம்பு விளையாட்டு, அறுபதிலும் ஐடென்ரி (கவிதை), மட்டக்களப்பு தமிழகத்தில் இருந்து எறாவூர்ப்பற்றின் பங்கு, பழைய செஞ்சொற் செல்வம், நவீன தமிழ் இலக்கியத்தின் வித்துக்களும் வளர்ச்சியும், ஊரும் பெயரும், சர்வதேச மின்னணு வலையமைப்பு (இன்டர்நெட்), கலைஞர் கௌரவம், நினைவு வானில், விழா இனிக்க, கலாசார விழா 1997 போட்டி முடிவுகள் ஆகிய 17 தலைப்புகளில் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. மலர் வெளியீட்டுக் குழுவில் ந.ஸ்ரீகரன், பி.விநாயகமூர்த்தி, வி.உதயகுமார், எஸ்.சுதாஜினி, த.சேனாதிராஜா, அ.ச.பாய்வா ஆகியோர் பணியாற்றியிருந்தனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22155).

ஏனைய பதிவுகள்

17843 சட்டநாதனின் கலையும் வாழ்வும்.

க.சட்டநாதன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, வைகாசி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 120 பக்கம், விலை:

11612 கிழக்கில் வெளுக்காத வழக்கு.

அக்கரையூர் மு.றூகா. அக்கரைப்பற்று: அகில இலங்கை இளைஞர் மன்றம், பெரிய பள்ளிவாசல் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1991. (சென்னை 600001: தாஜ் பிரஸ்,53, நயினியப்பன் வீதி). 120 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: