12416 – சிந்தனை (தொகுதி XV, இதழ் 3).

செல்லையா கிருஷ்ணராசா (இதழாசிரியர்), எஸ்.சந்திரசேகரம் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, நவம்பர் 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி).

v, 117 பக்கம், விலை: ஆண்டு சந்தா ரூபா 1500., அளவு: 24.5×19 சமீ.,ISSN: 2478-1061.

இவ்விதழில் புறவயநிலையில் இலங்கைத் திருச்சபை வரலாற்றில் விளக்கம் அளிப்பதில் எதிர்கொள்ளப்படுகின்ற சவால்கள்: குறிப்பாக போர்த்துக்கேயர் கால ஆவணங்களை மையமாகக் கொண்டது (வணபிதா ஞா.பிலேந்திரன்), உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையில் நல்லிணக்கத்தினை கட்டி யெழுப்புதல்: சவால்களும் சந்தர்ப்பங்களும் (த.கிருஷ்ணமோகன்), யுத்தத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கையின் வடமாகாண பாடசாலை மாணவர்க்குரிய பொதுப்பரீட்சைகளின் பெறுபேறுகளிலான தளம்பல்கள்: அவற்றுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் (ஆ.நித்திலவர்ணன்), யாழ்ப்பாணத்தில் பழப்பாகு தயாரிப்புக்களில் தரநிர்ணய அளவீடுகள்: ஓர் ஆய்வு (பத்மாசனி குலராஜசிங்கம், அருளானந்தம் கிறிஸ்ரி தவரஞ்சித்), வாழ்வாதாரச் சொத்துக்களை படமாக்கலும் வறுமையின் பரிமாணமும்: ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவை சிறப்பாகக் கொண்டது (சுபாஜினி உதயராஜா, கருணாகரன் சுதாகர்), குடியேற்றங்களால் உருவான தொன்மங்கள்-நல்லூர் அரசமரபின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்த குடியேற்றங்கள் தந்த தொன்மங்கள் பற்றிய ஆய்வு (செல்லையா கிருஷ்ணராசா), யாழ்ப்பாணப் பொருளாதாரக் கட்டமைப்பு (1930-1953): ஈழகேசரிப் பத்திரிகையினை அடிப்படையாகக் கொண்டது (கா.அருந்தவராஜா), யாழ்ப்பாண மாவட்டத்தில் காலநிலை மாற்றமும் தணிப்பு நடவடிக்கைகளும் (நா.பிரதீபராஜா) ஆகிய ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61369).

ஏனைய பதிவுகள்

11574 ஆணுக்குப் பெண் அடிமையா? ஒரு தேடல்.

முகில்வாணன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (மட்டக்களப்பு: ஓ.கே.பாக்கியநாதன் அறிஞர் சோலை). (4), 295 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5