12484 – தமிழருவி 1994:

கலைவிழாச் சிறப்பிதழ். ச.நவாதரன், க.ஜீவலிங்கம், பா.சுகன்னியா (இதழாசிரியர்கள்). மொரட்டுவை: தமிழ் இலக்கிய மன்றம், மொரட்டுவை பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 12: Sharp Graphics Pvt Ltd> D.G.2,Central Road)

(96) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19 சமீ.

மொரட்டுவைப் பல்கலைக்கழகம் நடத்திய தமிழ் விழா கலை நிகழ்வு 1998 அன்று நடைபெற்றவேளையில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர். ஆசியுரைகள், வாழ்த்துரைகள், அறிக்கைகள் என்பவற்றுடன், துணைவேந்தர் துரைராஜா (அ.ந.சசிதரன்), பயம் (திருக்கோவில் கவியுவன்), மௌனமான சோகங்கள் (மணிபாரதி), ஓ அவைகட்கு ஐந்தறிவோ (வை.ஆ.சர்மா), சமாதானம் (க. அன்பினி), மனிதத்திற்கு மாலையிடுவோம் (யாழவன்), ஏ மானிடா (எஸ்.ஈ. ஜெயராஜ்) ஆகிய கவிதைகளும், ஏற்றத்தாழ்வுகள் என்ற சிறுகதையும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14166).

ஏனைய பதிவுகள்

10661 மௌனகுருவின் நாடகங்கள்.

சி.மௌனகுரு. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). x, 372 பக்கம், விலை: ரூபா

15911 இதயத் தாமரை.

ஆரையம்பதி க. சபாரெத்தினம். மட்டக்களப்பு: நாகப்பர் கணபதிப்பிள்ளை நினைவுக் குழு, ஆரையம்பதி, 1வது பதிப்பு, ஜுன் 1990. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்). (2), 33 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14