12526 – ஈழத்து நாட்டார் வழிபாடு.

இரா.வை.கனகரத்தினம். பேராதனை: தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 186 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 22×14.5 சமீ.

இத்தொகுதியிலுள்ள கட்டுரைகள் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அமரர் இரா.வை.கனகரத்தினம் அவர்கள் ஊடாடிப்பெற்ற அனுபவத்தின் வழியாகவும், திட்டமிட்ட கள ஆய்வு நடவடிக்கைகள் மூலமும் பெற்ற தகவல்களின் அடிப்படையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளன. இவை வெறுமனே வழிபாட்டு நிகழ்த்துமுறைகளை-சடங்காசாரங்களை விபரணம் செய்வதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. சடங்கு, அவற்றின் வழியே உருப்பெறும் நிர்வாக முறைமைகள், பல்வேறு சமூகக் குழுக்களின் இணைவு, அந்த இணைவின் சாத்தியப்பாடுகள், சடங்கின் சமூக முக்கியத்துவம் எனச் சடங்குடன் தொடர்புடைய ஒவ்வொரு கூறும் மிக நுணுக்கமான கண்ணோட்டத்துடன் ஆராயப்பட்டுள்ளது. ஈழநாட்டிற் கண்ணகி வழிபாடு-ஓர் ஆய்வு, வன்னியிற் கண்ணகி வழிபாடு, ஈழத்து வன்னிமைகளின் சிறுதெய்வ வழிபாடு, ஐயனார் வழிபாடும் ஈழத்து வன்னிமை மக்களும், வன்னிவள நாட்டில் நாச்சிமார் வழிபாடு, நாட்டார் வழக்காற்றில் கொத்தித் தெய்வம், வதனமார் வழிபாடு, நாட்டார் வழக்காற்றில் பெரியதம்பிரான் வழிபாடு, நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டில் பெரியதம்பிரான் வழிபாடு-ஓர் அறிமுகம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஒன்பது கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அமரர் இரா.வை.கனகரத்தினம் அவர்களின் ஞாபகார்த்த மாகத் தொகுக்கப்பெற்ற இந்நூலின் நுலாக்கக் குழுவில் வ.மகேஸ்வரன், சோதிமலர் ரவீந்திரன், ஸ்ரீ பிரசாந்தன், ஆன் யாழினி சதீஸ்வரன், பெ.சரவணகுமார், எம். எம்.ஜெயசீலன், பா.சுமன், எம்.என்.ஜெஸ்மினா, எம்.வை.எப்.ரிஸ்மியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

14183 இல்லைத் துன்பமே: மூவர் அருளிய திருவைந்தெழுத்துப்பதிகங்கள்.

சோ. சண்முகசுந்தரன். கொழும்பு 6: சோ.சண்முகசுந்தரன், இல.5, மூர் வீதி, வெள்ளவத்தை, 3வது பதிப்பு, வைகாசி 1998. (கொழும்பு 2: கலர் டொட்ஸ், 31/21,டோசன் வீதி). 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 13.5×11

Bulk Texts Sales To have Local casino

Content Playson Ports Comment: Better Slots And you may Records Alternatívy Platobné Metódy Create On the web Kasína Withdrawing From the Shell out By Cellular

14116 கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை கொழும்பு: அரைநூற்றாண்டு நிறைவு 1925- 1975: பொன்விழா மலர்.

கு.குருசுவாமி, ச.த.சின்னத்துரை (பத்திராதிபர் குழு). கொழும்பு: கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை, 2வது பதிப்பு, ஜுன் 1976, 1வது பதிப்பு, மார்ச் 1976. (கொழும்பு 12: நியு லீலா அச்சகம்). (50) பக்கம், புகைப்படங்கள்,