16156 மணிவாசகர் அருளிய சிவபுராணம்.

மாணிக்கவாசகர் (மூலம்), சு.அருளம்பலவனார் (ஆராய்ச்சியுரை). காரைநகர்: சம்பந்தர்கண்டி நாகலிங்கம் சுந்தரராஜன் நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2022. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை).

40 பக்கம், ஒளிப்படத் தகடு, ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு : 20.5×14.5 சமீ.

சங்கநூற்செல்வர் பண்டிதமணி சு.அருளம்பலவனார் (1910-1966) அவர்களின் ஆராய்ச்சி உரையுடன் கூடியதாக யாழ்ப்பாணத்துக் காரைநகர் அ.சிவானந்தன் அவர்களால் 1967இல் வெளியிடப்பட்ட திருவாசக ஆராய்ச்சியுரையின் முதற்பாகத்தில் இடம்பெற்ற சிவபுராணப் பகுதியின் மீள்பிரசுரமாக இந்நூல் வெளிவந்துள்ளது. இது காரைநகர் சம்பந்தர்கண்டி நாகலிங்கம் சுந்தரராஜன் (15.07.1939-31.07.2022) அவர்களின் நினைவு வெளியீடாக அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

ஏனைய பதிவுகள்

11771 காலநதியின் கற்குழிவு: யாழ்ப்பாணம் வாழ் 40 எழுத்தாளர்களின் சிறுகதைகள்.

த.கலாமணி, இ.சு.முரளிதரன், அ.பௌநந்தி, க.பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). vi, 322 பக்கம், விலை: ரூபா