இரத்தினம் நித்தியானந்தன். லண்டன்: இ. நித்தியானந்தன், 179, Norval Road, Wembley, Middlesex, HA0 3SX, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (லண்டன்: ஆர்.எஸ்.பிரின்டர்ஸ், 88, Horsenden Lane North, Greenford, Middlesex UB6 7QH).
14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
2012இல் மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஓகஸ்ட் 9-12 திகதிகளில் நடந்தேறிய அனைத்துலக முருகபக்தி மாநாட்டில் வாசிப்பதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையின் நூல் வடிவம் இதுவாகும். யாழ்ப்பாணம் சித்தன்கேணியைச் சேர்ந்த கலாநிதி இரத்தினம் நித்தியானந்தன் கொழும்பு பல்கலைக் கழகத்தில் (1963-1971) இரசாயன விரிவுரையாளராகவும் பிரித்தானியாவில் செயின்ட் மேரி மருத்துவப் பள்ளி, இலண்டன் பல்கலைக்கழகத்தில் (1972-1993) முதுநிலை அறிவியல் ஆய்வாளராகவும், மேற்கு இலண்டன் தமிழ்ப் பாடசாலையில் (1982-1989) தலைமை ஆசிரியராகவும், பின்னர் இலண்டன் தமிழ் நிலைய தலைமையாசிரியராகவும் (1990-2012), இரத்தினம் அறக்கட்டளையின் தலைவராகவும் (2005 முதல் இன்று வரை) பணியாற்றி கல்விப்பணிகளிலும், சமூகச் செயற்பாடுகளிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திவந்தவர்.