மூ.சிவலிங்கம். யாழ்ப்பாணம்: சைவத் திருநெறிக் கழகம், இணுவில், 1வது பதிப்பு, ஏப்ரல் 2020. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில்).
xviii, 96 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×15.5 சமீ.
இணுவில் பெரிய சந்நியாசியார் சமாதியடைந்த 103ஆவது ஆண்டு நிறைவு விழாவில் அவரால் போற்றி வளர்க்கப்பட்ட வாழ்வாதாரப் பணியையும் சித்த மருத்துவத்தையும் கருப்பொருளாகக் கொண்ட இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. நூல்முகம், இணையிலி என்னும் இணுவில் திருவூர், மஞ்சத்தடியின் சிறப்பு, வாழ்வாதாரப் பணிகள், விவசாயியின் குடியிருப்பு, எம்மவரின் முற்கால வளவு வருமானம், பட்டிப் பசுக்களும் கால்நடைகளும், நாளாந்தப் பாவனைக்கான சத்துணவுப் பொருட்கள், விவசாயம், காலபோகப் பயிர்கள், சிறுதானியப் பயிர்கள், கிழங்குப் பயிர், காய்கறி கீரையினப் பயிர்கள், பிற்கால இணைப்பு விவசாயம், அக்கால நீர்ப்பாசன முறை, விவசாயம் தவிர்ந்த ஏனைய பணிகள், பனைவளம், முற்காலத்து எம்மவரின் பொது விழாக்களில் சமூக ஒற்றுமை, எம் முன்னோரின் மரண வீட்டிற்கான ஒத்துழைப்பு, (மருத்துவம்) எம்முன்னோர் காலத்து மருத்துவ முறை, இணுவில் பெரிய சந்நியாசியார், காரைக்கால் அம்பலவாண சுவாமிகள், சித்த மருத்துவர் முருகேசு அப்பாக்குட்டி, சித்த மருத்துவர் முத்து நாகலிங்கம், தேசப்புகழ் பெற்ற மருத்துவர் செல்லப்பா, சிறுபிள்ளை விசேட மருத்துவர் செ.கந்தையா, சித்த மருத்துவர் சு.இராமலிங்கம், (விஷக்கடி வைத்தியர்கள்) புலவர் நடராசையர், பொ.அப்புத்துரை, சித்த மருத்துவர் தாமோதரம்பிள்ளை, இதர சமூக சேவையான மருத்துவத் துறைகள், பாட்டி வைத்தியம், இணுவில் அமெரிக்கன் மிஷன் மருத்துவமனை ஆகிய 33 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.