வடகோவை சபாபதி நாவலர் (மூலம்), என்.சண்முகலிங்கன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், மீள் பதிப்பு, 2021, (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
xlii, 328 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-5911-10-3.
தமிழ் இலக்கண இலக்கிய சாத்திர மெய்வரலாறுகளை, அன்றெழுந்த தமிழ் நூல்கள் பற்றிய செய்திகளை இனிதுபடக்கூறும் நூல் திராவிடப் பிரகாசிகையாகும். தமிழில் வெளியான முதல் தமிழ் வரலாற்று நூல் என்ற பெருமைக்குரியது. இந்நூல் தமிழின் தெய்வப்பழமை மரபியல், இலக்கண மரபியல், இலக்கிய மரபியல், சாத்திர மரபியல், ஒழிபியல் என ஐவகைப் பிரிவுகளில் எழுதப்பட்டுள்ளது. திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவான் யாழ்ப்பாணத்து வடகோவை சபாபதி நாவலர் அவர்களால் இயற்றப்பட்டு சித்தாந்த வித்தியாநுபாலன அச்சியந்திரசாலையில் கார்த்திகை 1889இல் பதிப்பிக்கப்பட்ட இந்நூலை அவரது மருமகனாரான அ.சிவகுருநாதபிள்ளையவர்கள் 1927இல் மீள்பதிப்பாகப் பிரசுரித்துள்ளார். இந்நூல் அதன் பின்னைய பதிப்பாகும். இந்நூலில் முதற்பதிப்பு 1899 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்நூலின் வைகாசி 1927ஆம் ஆண்டுக்குரிய இரண்டாம் பதிப்பு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உள்ளது. சேர்க்கை இலக்கம் 27276).