ஏ.எம்.றியாஸ் அஹமட் (புனைபெயர்: அம்ரிதா ஏயெம்). அக்கரைப்பற்று-2: பேஜஸ் புத்தக இல்லம், 117, பட்டினப்பள்ளி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2021. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B. மின்சார நிலைய வீதி).
70 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-624-6047-09-2.
இலங்கைக்கு பூர்வீகமில்லாத வெளிநாட்டு விலங்குகள், தாவரங்கள் என்பவை அறிமுகப் படுத்தப்படும்போது அவற்றைப் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்திய பின்னர் அறிமுதம் செய்வதே சிறந்ததாகும். இவ்வாறின்றேல் இலங்கையின் தற்போதைய பாதகமான நிலையையே நாடுகள் சந்திக்கவேண்டி நேரிடும். இதனை இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வலியுறுத்துகின்றன. இலங்கையில் அந்நிய ஆக்கிரமிப்புத் தாவரங்கள், மரங்களின் ‘புறொய்லர் கோழி” காயா மரம்-ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு இனமா?, இராட்சத தொட்டாச் சுருங்கி, எங்கள் காலடிக்கு வந்துவிட்ட ஆக்கிரமிக்கத் துடிக்கும் அபாயம், சீமைக் கருவேலம்-பெரு வரவேற்புடன் விருந்தாளியாக வந்த அந்நிய ஆக்கிரமிப்பு ஆபத்து, யூகலிப்ரஸ் மரங்கள், இப்பில் இப்பில் இங்கிதமாகக் குடியேறிய ஆக்கிரமிப்பு இராட்சசன் ஆகிய தலைப்புகளில் எம்மண்ணுக்குக் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட அத்தகைய சில அந்நிய தாவரங்கள் பற்றிய சுவையான பல அறிவியல் தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.