கண்ணன் கண்ணராசன். ஜேர்மனி: கண்ணன் கண்ணராசன், தொலைநோக்கி வெளியீடு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2016. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).
xvi, 80 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-43463-0-7.
சந்தக் கவிதைகளாலும், அடுக்கிடுக்குக் கவிதைகளாலும் தனக்கேயுரிய தனித்துவமான பாணியில் தன்னுணர்வுக் கவிதைகளை சரளமாக தனக்கேயுரிய தனித்துவமான பாணியில் சரமாரியாகக் கொட்டித் தீர்த்திருக்கிறார் இக்கவிஞர். 80 பக்கங்களில் 147 தலைப்புகளில் குறுங் கவிதைகளைச் சேர்த்து இடையிடையே வண்ணப்படங்களால் அழகேற்றித் தன் மரபு கடந்த புதுக்கவிதைப் படைப்பை வாசகரின் ரசிப்பிற்கு விட்டிருக்கிறார். “கிறுக்கிப் போட்ட காகிதங்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது. புலம்பெயர்ந்து ஜேர்மன் தேசத்தில் வசிக்கும் கவிஞர் கண்ணன் கண்ணராசன் எழுதிய கவிதை நூலின் வார்த்தைகளில் சமூக நலன் பற்றிய சிந்தனைகளும், கோபங்களும், அதன் தாக்கங்களுமென்று பலவற்றைச் சுமந்து நிற்கின்றன.