16541 தீந்தமிழ் வளர்த்த திருமறைக் காவலர்கள் (ஞானக் களஞ்சியம் -2).

க.த.ஞானப்பிரகாசம். யாழ்ப்பாணம்: கத்தோலிக்க கலை இலக்கிய வட்டம், 10/2, மத்தியூஸ் வீதி, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: ஹரிகணன் பிரின்டர்ஸ், 681, காங்கேசன்துறை வீதி).

vi, 30 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-43475-2-6.

கவிமணி க.த.ஞானப்பிரகாசம் (மறைவு: 16.08.2006) யாழ்ப்பாணம், நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் அதிபராக பல ஆண்டுகள் சேவையாற்றினார். இவரின் தீந்தமிழ்க் கவிதைகள் தமிழ் மக்களால் என்றும் போற்றப்படத்தக்கன. தமது கவிதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் பல பரிசில்களையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். அவற்றுள் இலங்கையில் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தமையும், இந்தியாவில் பாரதி விருது கிடைத்தமையும் குறிப்பிடத்தக்கன. சுவாமி ஞானப்பிரகாசர், தவத்திரு தனிநாயகம் அடிகள், தாவீது அடிகள் ஆகிய மூன்று தமிழ் அறிஞர்களப் பற்றிப் பாடிய பாடல்களை இந்நூலில் தொகுத்தளித்திருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

Recenzje i Bonusy

Content Terminy wpłat oraz wypłat i opłaty poboczne | Zagraj w attraction Oddaj uwagi ponieść siły tego kasyna! Kiedy wypłacić wygrane w całej Beep Beep

13426 சிங்களம் பேசுவதற்கான கைந்நூல்(தெமள கதாகிரீமே அத்பொத்த).

எம்.பாலகிருஷ்ணன். கொழும்பு 10: பிரிஷன்மி கிரியேஷன்ஸ், 33B, (N.H.S.), சிரி தம்ம மாவத்த, 2வது பதிப்பு, 1996, 1வது பதிப்பு, 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 72 பக்கம், விலை: ரூபா 35.,