16614 அசை: சிறுகதைத் தொகுப்பு.

மலரன்னை (இயற்பெயர்: அற்புதராணி காசிலிங்கம்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

iv, 124 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-0958-70-2.

இந்நூலில் ஏன் இந்த மாற்றம், இணையும் கரங்கள், மீண்டும் நாளை வருவான், பங்களிப்பு, பரிவும் பகிர்வும், பருந்தின் பசி, பாதுகாப்பு, சபதம், சரியான பாதை, தளிரின் தாகம், ஈரம், அலைகள் ஓய்வதில்லை, நீ நடந்த பாதையிலே, ஒத்தடம், புதுச்சட்டை, சங்கமம், சுதந்திர தாகம், தெளிவு, புயலாக மாறும் பிஞ்சுகள், விழிப்பு, விண்ணிலிருந்து ஆகிய தலைப்புகளில் மலரன்னை எழுதியிருந்த 21 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஈழத்தமிழர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகளின் சாட்சியமாக இத்தொகுப்பின் கதைகள் அமைந்துள்ளன. இந்நூல் 185 ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

11055 மனிதன் புனிதனாக.

ஷேக் ஹசன் அஸ்ஹரீ. கண்டி: இஸ்ஸத் பதிப்பகம், 67, லேடிமக்கலம் டிரைவ், 1வது பதிப்பு, 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை). xx, 21-320 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13 சமீ., ISBN: 955-8782-00-9.