ராம. சுப்பிரமணியம். அட்டன்: இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, மே 1968. (அட்டன்: ந.அ.தியாகராசன், மவுண்ட் அச்சகம், டண்பார் வீதி).
(2), 8 பக்கம், விலை: 25 சதம், அளவு: 18×12சமீ.
‘தவம்” என்னும் இச்சிறுகதையை எழுதியுள்ள திரு.ராம.சுப்பிரமணியம் அவர்கள், அனுபவம் மிக்க மலையக எழுத்தாளர். பல சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். வீரகேசரி நடாத்திய சிறுகதைப் போட்டியிலும், இலங்கை வானொலி நடாத்திய நாடக சிறுகதைப் போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளார். துடிதுடிப்பும் ஆர்வமும் மிக்க இவ்விளைஞர் கற்பனைக்கும் கருத்துக்கும் எழுத்திலும் பேச்சிலும் வளமூட்டுபவர். இவ்வன்பரின் சிறுகதையை வெளியிடுவதில் மலையக எழுத்தாளர் மன்றத்தின் அட்டன் இலக்கிய வட்டம் பெருமையடைகின்றது. (முன்னுரையில், ந.அ.தியாகராசன். 20.05.1968)