16684 நிஜங்கள்.

பார்த்திபன். மேற்கு ஜேர்மனி: Sud Asien Buro, Kiefernatr 45, 5600, Wuppertal 2, 1வது பதிப்பு, மார்ச் 1986. (கல்லச்சுப் பிரதி).

40 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×15 சமீ.

இத்தொகுப்பில் நிஜங்கள், குற்றமில்லாத கொலைகள், ஒரே ஒரு ஊரிலே, உயரப் பறக்கும் பறவைகள் ஆகிய கதைகள் இடம்பெற்றுள்ளன. மேற்கு ஜேர்மனியில் வந்து குடியேறிய ஈழத்தமிழர்கள் தமது இலக்கியத் தொடர்பாடல்களுக்கு இத்தகைய வடிவமைப்பிலான கல்லச்சு நூல்களையே தொடக்கத்தில் பயன்படுத்தினர். அவையே ஆரம்ப வழிவகைகளாக இருந்தன. அவ்வகையில் புலம்பெயர் இலக்கிய வரலாறு பற்றிய தேடலை மேற்கொள்பவர்களுக்கு இத்தகைய ஆரம்பகால நூல்கள் முக்கிய வரலாற்றுச் சான்றுகளாகும்.

ஏனைய பதிவுகள்

17603 அன்பினில் மலர்ந்த அமர காவியம் (நாடகம்).

எஸ்.ஏ.ஐ.மத்தியூ. கல்முனை: கார்மேல் பாத்திமாக் கல்லூரி பழைய மாணவர் வெளியீடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2000. (மட்டக்களப்பு: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்). xi, 53 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.