16702 மனுஷி : சிறுகதைகள்.

சண். தவராஜா. திருச்சி 620 003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர்,  1வது பதிப்பு, ஜீலை 2020. (சென்னை: கப்பிட்டல் பிரிண்டர்ஸ்).

ix, 10-80 பக்கம், விலை: இந்திய ரூபா 100.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-944044-7-7.

இத்தொகுப்பில் மனுஷி, நெஞ்சு பொறுக்குதில்லையே, காட்டிக் கொடுப்பு, நோய், இரை, வண்டியும் ஒரு நாள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஆறு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மனுஷி என்ற கதை புகலிட வாழ்வில் பெண்களின் சமூக நிலையை விபரிப்பதாக அமைகின்றது. எஞ்சிய கதைகள் அனைத்தும் ஈழத்தின் போர்க்கால வாழ்வியலைப் பேசுகின்றன. சமூக செயற்பாட்டாளரான ஊடகவியலாளர் சண்.தவராஜா சுவிற்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். திருச்சி இனிய நந்தவனம் பதிப்பாக வெளியான மனுஷி சிறுகதை நூல் சேலம் தமிழ்ச் சங்கம், கம்பம்- பாரதி கலை இலக்கிய மன்றம் ஆகியவை நடத்திய போட்டிகளில் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்

16115 இலண்டன் திருவருள்மிகு ஸ்ரீ சிவன் திருக்கோயில் குடமுழுக்குப் பெருவிழா சிறப்பு மலர் 2011.

மலர்க்குழு. லண்டன்: லண்டன் சிவன் கோயில் அறக்கட்டளை, 4A, Clarendon Rise,  Off Lee High Road, Lewisham SE13 5ES, 1வது பதிப்பு, ஜீன் 2011. (லண்டன்: வாசன் அச்சகம்). 240 பக்கம்,