16738 எறிகணை.

தியா (இயற்பெயர்: இராசையா காண்டீபன்). சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல. 9, பிளாட் எண்: 1080A, ரோஹிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, 1வது பதிப்பு, ஜீலை 2021. (சென்னை 600 005: ரமணி பிரின்ட் சொலுஷன்ஸ்;).

144 பக்கம், விலை: இந்திய ரூபா 180., அளவு: 21×14  சமீ., ISBN: 978-81-953269-9-0.

ஈழத்து எழுத்தாளரான தியா எழுதி தமிழகத்தின் டிஸ்கவறி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ஒரு நாவல் இது. ஈழத்து மக்களின் வலி சுமந்த வாழ்வினை மையப்பொருளாக வைத்து எழுதப்பட்ட ஒரு கதை. ஈழத்தில் போர் ஆரம்பித்த காலத்தில் இருந்து முள்ளிவாய்க்கால்வரை ஒரு குடும்பம் கடந்துவந்த பாதையை தத்ரூபமாக படம் பிடித்து காட்டிய ஒரு நாவல். இயற்கையோடு இணைந்து போகும் கதைக்களம், அழகான சொல்லாடல்கள், ரசிக்கத்தூண்டும்  வர்ணனைகள், நம் வாழ்க்கையோடு ஒட்டிய வாழ்க்கைமுறை, கண்ணியமான காதல், வன்னியின் அழகு என வாசிப்போரை கதையுடன் ஒன்றிப்போக வைத்திருக்கும் எழுத்தாளரின் அனுபவம் இந்த கதையை கண்முன் படம்பிடித்து காட்டியுள்ளது. இந்த நாவல் ஒவ்வொரு ஈழத் தமிழரின் அனுபவத்தை, வலிகளை ஆவணமாக்கியுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஏனைய பதிவுகள்

10375 விவசாயம் தரம் 11.

ந.சந்திரகுமார். மட்டக்களப்பு: ந.சந்திரகுமார், 515/23, திருமலை வீதி, 1வது பதிப்பு, தை 2002. (மட்டக்களப்பு: கீன் அச்சகம்). vi, 106 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ. தரம் 10க்குரிய பாடங்களில்

11615 குறுந்தொகை.

வ.ஐ.ச.ஜெயபாலன். சென்னை 600041: க்ரியா, புதிய இல. 2, பழைய இல. 25, 17ஆவது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2013. (சென்னை 600017: சுதர்சன் கிராப்பிக்ஸ்). 184