வி.விமலாதித்தன். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம்; ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).
ix, 154 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-624-6036-00-3.
“இலங்கையின் மரபுவழித் தமிழிலக்கியம்” என்ற தொனிப்பொருளில் கடந்த 2020 நவம்பர் மாதம் 21 முதல் 30 வரை இணையவழியில் நடந்த ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுகளின் தொகுப்பு இது. இலங்கைத் தமிழ் இலக்கியச் செல்நெறியில் இல்லற நொண்டி (மார்க்கண்டன் ரூபவதனன்), பஞ்சவன்னத் தூது (வ.மகேஸ்வரன்), கதிரைமலைப் பள்ளு (சோ.பத்மநாதன்), மாவைப் புராணம் (அ.சண்முகதாஸ்), வரத பண்டிதரின் குருநாதசுவாமி கிள்ளைவிடு தூது: காலமும் கருத்தும் (க.இரகுபரன்), அர்ச்.யாகப்பர் அம்மானை (றூபி வலன்ரீனா பிரான்ஸிஸ்), புலோலி பசுபதீஸ்வரர் பதிற்றுப்பத்தந்தாதி ஓர் அறிமுகம் (ச.மனோன்மணி), இரகுவம்மிசம்: கவிஞர்-பின்புலம்-காவியம் (ஸ்ரீபிரசாந்தன்) ஆகிய எட்டு ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.