ஆண்டி பசுபதி. நெடுந்தீவு: அமரர் ஆண்டி பசுபதி குடும்பத்தினர், 2ஆம் வட்டாரம், நெடுந்தீவு மேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2021. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
நெடுந்தீவைச் சேர்ந்த அமரர் ஆண்டி பசுபதி அவர்களின் மறைவின் 31ஆம் நாள் நிகழ்வின் போது 22.08.2021 அன்று வெளியிடப்பட்டது. அமரர் பசுபதி பற்றிய இரங்கலுரை, அவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு என்பவற்றுடன், மருத்துவ மாவனம் (க.துவாரகா), ஞாபகங்கள்-கவிதை (க.ஜீவிகா, ஆ.மதுநிதன்), நான் கண்ட பாரதியார் (க.கார்த்திகா), அமரர் (நிலவன்), எங்கள் ஐயாவிற்கு (க.செந்தூரன்), கல் (நிலவன்), இராட்சத மிருகம் (க.யருசிகா), காட்டு தேவதை (குஷன்), இனி ஒரு விதி செய்வோம் (நா.துஷாநந்தி), தாவர பீடை விரட்டிகள் (-), நஞ்சற்ற உணவு நானிலத்தை நலமாக்கும்: தாவர நோய் விரட்டிகள் (-), சேதனம் சேர்த்த மாதவம் செய்வோம் (-) ஆகிய படைப்பாக்கங்களையும் இணைத்து இந்நினைவு மலர் உருவாக்கப்பட்டுள்ளது.