மலர்க் குழு. திருக்கோணமலை: ஏற்பாட்டுக் குழு, கிளிவெட்டி மேம்பாட்டு ஒன்றியம், 1வது பதிப்பு, 2022. (திருக்கோணமலை: பென் விஷன் (Ben Vision) அச்சகம்).
xi, 280 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் அருணாசலம் தங்கதுரை அவர்களின் மறைவின் 25ஆவது ஆண்டு நினைவு மலர். அருணாசலம் தங்கத்துரை (17.01.1937-05.07.1997) இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். 1936 ஆம் ஆண்டில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மூதூரில் கிளிவெட்டி என்ற ஊரில் பிறந்த அருணாசலம் தங்கத்துரை தனது கல்வியை கிளிவெட்டி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும், பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும் கற்றார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் 1979 ஆம் ஆண்டில் கொழும்பு சட்டக் கல்லூரியில் இணைந்து 1980 இல் சட்டத்தரணியானார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 1970 முதல் 1977 வரை மூதூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் 1994 ஆம் ஆண்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 1997, ஜீலை 5 ஆம் திகதி; திருகோணமலையில் வைத்து இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார். திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் பங்குபற்றிய போது இவருடன் கல்லூரி அதிபர், உட்பட ஐவர் உயிரிழந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளே இத்தாக்குதலை நடத்தியதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியது.