செந்துறைமுத்து. சென்னை 600014: விசாலாட்சி நிலையம், 62/1, முத்து முதலி தெரு, இராயப்பேட்டை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1998. (சென்னை 14: வெற்றி அச்சகம், 91, டாக்டர் பெசன்ட் சாலை, இராயப்பேட்டை).
284 பக்கம், விலை: இந்திய ரூபா 63.00, அளவு: 18×12.5 சமீ.
தமிழகத்தைச் சேர்ந்த புலவர் செந்துறைமுத்து அவர்கள் எழுதியுள்ள இந்நூலில் மறைமலை அடிகள், ஞா.தேவநேயப் பாவாணர், கா.அப்பாத்துரையார், பாரதிதாசன், உ.வே.சாமிநாதையர், ச.சோமசுந்தரபாரதி, ந.மு.வேங்கடசாமி நாட்டார், மீனாட்சி சுந்தரம்பிள்ளை, மு.கதிரேசச் செட்டியார், திரு.வி.கலியாணசுந்தரனார், ரா.பி.சேதுப்பிள்ளை, பாண்டித்துரைத் தேவர், கா.சுப்பிரமணியபிள்ளை, வ.சுப.மாணிக்கனார், சி.என்.அண்ணாதுரை, சி.இலக்குவனார், கி.ஆ.பெ.விசுவநாதம், வ.உ.சிதம்பரனார் ஆகியோருடன் ஈழத்தவர்களான யாழ் நூல் வித்தகர் விபுலானந்த அடிகள், பேச்சிலக்கியத் தந்தை ஆறுமுக நாவலர் ஆகியோர் பற்றிய வாழ்வும் பணிகளும் பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.