15055 வாழ்வியல் : அனுபவ பகிர்வு பாகம் 3.

வீ.என்.சந்திரகாந்தி. திருக்கோணமலை: ஜெயகாந்தி கலை கலாச்சார விளையாட்டு மேம்பாட்டுக் கழகம், 572 A, ஏகாம்பரம் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2020. (திருக்கோணமலை: A.R.Traders, திருஞானசம்பந்தர் வீதி).

156 பக்கம், விலை: ரூபா 400.00, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-98979-6-5.

திருக்கோணமலைப் படைப்பாளி, வீ.என்.சந்திரகாந்தியின் வாழ்வியல் அனுபவங்களின் பதிவாக இந்நூல் வெளிவந்துள்ளது. தனது எழுபது வருட வாழ்க்கைப் பயணத்தில் தான் எதிர்கொண்ட சவால்கள், அடைந்த வெற்றிகள், சறுக்குண்ட சம்பவங்கள் தனது ஆழ்மனதில் பதிந்தவை அனைத்தையும் ஒரு நாவலாசிரியனுக்கேயுரிய சுவையுடன் சொல்லியிருக்கிறார். கலாபூஷணம் வீ.என்.சந்திரகாந்தி அவர்கள் ஏற்கனவே இரண்டு பாகங்களில் அனுபவபகிர்வு கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டவர். இது இவரது எட்டாவது நூலாகும். சமூகம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் அடையாளம் காட்டும் வகையிலும் இக்கட்டுரைகள் அமைகின்றன. இன்று தமிழ் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளில் இளைஞர்களும் யுவதிகளும் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்கு இந் நூல் வழி காட்டுகின்றது.

ஏனைய பதிவுகள்

Crazy Cherry Position

Content Do i need to Install The newest Online game To experience For free?: free spins Kings Chance 30 no deposit As to the reasons