15187 நினைவுகூர்தல்-2017.

நிலாந்தன். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).

20 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 21×15.5 சமீ.

இன அழிப்பின்போது மரணமடைந்தவர்களை நினைவுகூர்தல் ஒரு கூட்டுரிமையும் கூட்டுப் பொறுப்புமாகும். தமிழ் மக்கள் இந்த இரண்டிற்கும்உரித்துடையவர்கள். இவற்றைத் தட்டிக் கழிப்பதோ, தவறவிடுவதோ தமிழ் மக்களுக்கு எற்றதல்ல. இந்த நினைவுகூர்தல் மூலம் தான் நீண்டகாலமாக ஆழப்பதிந்துள்ள கூட்டு மனக் காயத்தையும் ஆற்றுப்படுத்த முடிகின்றது. நிலாந்தன், இன அழிப்பின்போது மரணமடைந்தவர்களை நினைவுகூர்தல் தொடர்பாக தனது கருத்துக்களை வலிமையாக இந்நூலில்  பதிவுசெய்திருக்கிறார். யாழ்ப்பாணம், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அரசியல் சிந்தனை நூல் வரிசையில் 3ஆவது நூலாக இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

11000 மாற்றுவெளி ஆய்விதழ்: போருக்குப் பிந்தைய ஈழம்.

வீ.அரசு (சிறப்பாசிரியர்), தெ.சுகுமாரன் (அழைப்பாசிரியர்). சென்னை 600106: பரிசல் புத்தக நிலையம், ப.எண் 96, ஜெ.புளொக், நல்வரவு தெரு, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், 1வது பதிப்பு, அக்டோபர் 2011 (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).