டிசெம்பர் 2007. யோ.யோண்சன் ராஜ்குமார், கி.செல்மர் எமில், வை.வைதேகி (ஆசிரியர் குழு). யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசெம்பர் 2007. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர், 28, மார்ட்டின் வீதி).
92 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100.00, அளவு: 20×15 சமீ., ISSN: 1800-2730.
‘ஆற்றுகை’ இதழ் திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ். இதன் முதலாவது இதழ் 1994ஆம் ஆண்டு ஐப்பசி-மார்கழி இதழாக வெளிவந்தது. கலை ஆர்வலர்களுக்கும், நாடக அரங்கியலைப் பயிலுகின்ற மாணவர்களுக்கும், அரங்கியலைப் பற்றி அறியவிரும்புவோருக்கும் பயன்மிக்கதாக அமைந்த இவ்விதழ், அரங்கவியல் கட்டுரைகள், கலைஞர்கள் பற்றிய குறிப்புக்கள், ஆற்றுகைத் திறனாய்வுகள், அரங்க நூல் அறிமுகம், அரங்க நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் என்பவற்றை தாங்கி வெளிவந்தது. 16ஆவது இதழாக வெளிவந்துள்ள இவ்விதழில், சாஸ்திரீய அரங்குகளில் வர்ணக் குறியீடு: இந்தியா-சீனா-யப்பான் (டி.ஏ.ராஜகருணா-ஆங்கில மூலம், நவதர்ஷனி கருணாகரன்-தமிழாக்கம்), யப்பானிய நாடகம் (அம்மன்கிளி முருகதாஸ்), நாடக நெறியாளர் என்கிற இன்னொரு கலை ஆளுமை (முனைவர் மு.இராமசாமி), பாடிப் பறந்திட்ட படர்வனக் குயிலும்.. வடிவேலு செல்வரத்தினம்: 1947-2006 (பாக்கியநாதன் அகிலன்), உருவத்திற்கு உணர்வு கொடுத்தல்: இசை நாடகக் கலைஞன் செல்வம் மீதான ஒரு பார்வை (க.ரதிதரன்), யாழ்ப்பாணக் கத்தோலிக்க நாட்டுக் கூத்து மரபு-10 (யோ.யோன்சண் ராஜ்குமார்), கூத்து எங்களுடைய முதுசம்: அண்ணாவியார் எ.வரப்பிரகாசத்துடன் ஒரு நேர்காணல் (ஆசிரியர் குழு), ஷேக்ஸ்பியரின் படைப்புக்கள், அகக் கோலங்கள்- வேட முகங்களின் காட்சி (நாடகன்), அரங்கியலில் புதிய நூல் வரவுகள், இந்திய தேசிய நாடகப் பள்ளி நடத்திய நாடகப் பட்டறை (வை.வைதேகி), 2007ஆம் ஆண்டுக்கான அரங்கப் பதிவுகள்-05.12.2007 வரையிலானவை (கி.செல்மர் எமில்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.