கு.சிவகுமார். வல்வெட்டித்துறை: ஜனனி வெளியீட்டகம், புதுவளவு, பொலிகண்டி, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
128 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 22.5×15.5 சமீ.
தரம் 10-11 வரையிலான ‘நாடகமும் அரங்கியலும்’ பாடப் பகுதிகளின் தேவைகளை அனுபவ அடிப்படையில் இனங்கண்டு மாணவர்களில் உயர் தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் நூல் இதுவாகும். கு.சிவகுமார், கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் ஆசிரியராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 66359).