யோகராணி கணேசன், கனிசா கணேசன், கஷ்வினி கணேசன். வவுனியா: கணேசன் பதிப்பகம், 221/2, நேரிய குளம் வீதி, புதையல் பிட்டி, நெளுக்குளம், 1வது பதிப்பு, மாசி 2020. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).
28 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250.00, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-96118-0-1.
புலம்பெயர் தமிழரின் மூன்றாம், நான்காம் தலைமுறையினரை மனங்கொண்டு நோர்வேஜியன் மொழிச் சிறுவர் கதைகளைத் தழுவி எழுதப்பட்ட சிறுவர் கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. திருமதி யோகராணி கணேசன் தனது பிள்ளைகளான கனிசா கணேசன், கஷ்வினி கணேசன் ஆகியோரின் பங்களிப்புடன் இந்நூலை உருவாக்கியுள்ளார். இந்நூலுக்கான சித்திரங்களை கனிசா, கஷ்வினி ஆகியோருடன் அவர்களது சகோதரர் கேவினும் இணைந்து வரைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதிலுள்ள கதைகள் எமது மரபுவழியான கதைகளிலிருந்து பெரிதும் வேறுபட்டுள்ளன. பெரும்பாலும் பிள்ளைகள் தாம் விரும்பும் கதாபாத்திரங்களைக் கொண்டு அமைத்;துள்ளனர். வசன அமைப்புகள் பிள்ளைகளின் எளிமையான வசன அமைப்புகளாகவே உள்ளன. இக்கதைகளை வாசிக்கும் பிள்ளைகள் தம்மாலும் இப்படி எழுத முடியும் என்ற தன்னம்பிக்கையையும் தூண்டுதலையும் பெறுவார்கள் என நம்ப முடிகின்றது. யோகராணி கணேசன் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா கற்கை நெறியைப் பயின்றவர்.