ஜே.பிரோஸ்கான். கிண்ணியா-3: பேனா பப்ளிக்கேஷன்ஸ், 92/4, உமர் ரலி வீதி, மஹ்ரூப் நகர், 1வது பதிப்பு, நவம்பர் 2014. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, புகையிரத நிலைய வீதி).
64 பக்கம், விலை: ரூபா 295.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-52149-2-6.
ஜமால்தீன் பிரோஸ்கான் திருக்கோணமலை மாவட்டத்தின் கிண்ணியாவைச் சேர்ந்தவர். க.பொ.த. உயர் தரம் வரை கல்வி கற்றவர். தற்போது கிண்ணியா பொதுநூலகத்தில் பணியாற்றி வருகின்றார். தனது இலக்கிய பயணத்தை கடந்த 20 வருடங்களாக கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, குறுந்திரைப்படம், இலக்கிய அமைப்பு, செய்திப் பத்திரிகையென பயணித்துக் கொண்டிருக்கிறார். கிண்ணியா பேனா இலக்கியப் பேரவை, பேனா பப்ளிஷர்ஸ் ஆகியவற்றின் பணிப்பாளரான இவர், இதுவும் பிந்திய இரவின் கனவுதான் (2009), தீக்குளிக்கும் ஆண்மரம் (2012), ஒரு சென்றிமீட்டர் சிரிப்பு பத்து செக்கன்ட் கோபம் (2013), என் எல்லா நரம்பகளிலும் (2013) ஆகிய கவிதைத் தொகுப்புகள் அடங்கலாக இதுவரை 10 நூல்களை வெளியீடு செய்துள்ளார். பல சர்வதேச தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக படைப்பு குழுமத்தின் மாதாந்திர சிறந்த படைப்பாளி பரிசு (2018 ஆம் ஆண்டு), அனைத்துலக கவிதை தினப் போட்டியில் சிறப்பு விருது, கொடகே தேசிய சாகித்திய விருதும் மற்றும் சரத் ஜயக் கொடி தேசிய கவிதைக்கான இரண்டு விருதும் பெற்றுள்ளார். இந்நூலில் உள்ள தனது கவிதைகளில் இக்கவிஞர் இஸ்லாமிய உபயோகச் சொற்களையும் கலந்து விட்டிருக்கிறார்.