மைதிலி தயாபரன். வவுனியா: கிருஷ்ணிகா வெளியீட்டகம், வேப்பங்குளம், 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம்).
xii, 13-81 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18×12 சமீ., ISBN: 978-955-41614-9-8.
ஆசிரியரின் இலக்கியப் பயணத்தில் இது பத்தாவது நூலும், நான்காவது கவிதைத் தொகுப்புமாகும். கவிதைகள் தேவார வரிகளைக் கொண்டு தொடங்கியிருந்தாலும் அவற்றில் சர்வமதங்களுக்கும் பொதுவான விடயங்களையே குறிப்பிடுகின்றார். பூமாலை புனைந்தேத்திப் புலர்வதன் முன், நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு, உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம், நிலைபெறுமாம் எண்ணுதியேல், தேச விளக்கெலாம் ஆனாய் நீயே என இன்னோரன்ன கவிதைத் தலைப்புகளில் இக்கவிதைகள் விரிந்துள்ளன.