15488 இன்னொரு கண் (புதுக்கவிதை).

யாழ் அகத்தியன் (இயற்பெயர்: ஏரம்பமூர்த்தி காண்டீபன்). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், உடையார்கட்டு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).

x, 98 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், தகடுகள், விலை: (ஐந்து நூல்கள் கொண்ட தொகுதி) ரூபா 750., அளவு: 10×18.5 சமீ., ISBN: 978-955-4096-16-5.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட யாழ். அகத்தியன், புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற பின்னர் உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் தொடர்ந்து பயின்றவர். போர்க்கால வாழ்வை அனுபவித்தவர். புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வாழ்ந்தாலும் வெளிநாட்டு வாழ்வில் கரைந்து விடமுடியாதவர். பிரபல கவிஞர்களின் படைப்பாக்கங்களுடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொண்டவர். இவரது முதல் படைப்பு ஆனந்த விகடனில் பிரசுரமானது. தொடர்ந்து தமிழகப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இவரது படைப்பாக்கங்கள் வெளிவந்திருந்தன. சுமார் 15 ஆண்டுக்கால அனுபவத்துடன் இத்தொகுப்புகளை மேற்கொண்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

10136 தச்சைத் திருப்பதி வரலாறு.

கந்தப்பு ஆனந்தக் குமாரசாமி, நடராசா விநாயகமூர்த்தி (தொகுப்பாசிரியர்கள்). கரவெட்டி: கரவையூர் ஆதவன், 1வது பதிப்பு, 2009.(யாழ்ப்பாணம்: பிள்ளையார் அச்சகம், நல்லூர்). viii, 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×15 சமீ. யாழ்ப்பாண மாவட்டத்தில்