15492 உதிராக் குரும்பட்டிகள்.

த.ரமேஸ். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (களுதாவளை: மாருதி அச்சகம்).

xx, 80 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-8715-83-3.

1983இல் பிறந்த இக்கவிஞர் திருப்பழுகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர். மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியில் பயின்று ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இத்தொகுதியில் புலமைப்பரிசில் பூதம், நிவாரணம், தேடல், கடந்து வா, கல்விப் புழுகு, நண்பனின் கடைசி மடல், மனுநீதி, உனக்காக, புதைந்த பொக்கிஷங்கள், ‘அ’ முதல், உயர்ந்தவர்கள், யார்?, எனக்குப் போதும், யாராயினும், தென்னை பல்கலைக்கழகம், செய்வது, கடவுளும் நம்பமாட்டார், நவீனன், பாலைப் பனி, மட்கியது, உண்மை, நீ மௌனியாய், அவதாரம், மானுடக் காதல், காலம் பக்கத்தில், சாதனை, ஜீவகாருண்யம், மனப்பகடை, கனடா கைக்குள், ஊமை ஓவியங்கள், உதிராக் குரும்பட்டிகள், அவமானம், விருப்பம்போல, ஏன், விபரீதப் படைப்பு, சுதந்திரம், சிதையும் மேகம், சீதனம், பாதிச் சாதி, மௌனம், எது என் கதாபாத்திரம், பெயர், தொழில் மாற்றம், கூண்டுக்குள், கொடுக்கேறும் காலம், எதைச் சொல்ல, நியாயம் கற்பிக்கப்பட, மானம், மறைமுகம், நீதி ஆகிய தலைப்புகளில் இக்கவிஞர் எழுதிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

2894 – புனித பயணம்: சிவபாலன் சாந்தரூபன் நினைவு மலர்.

சு.சிவபாலன் (தொகுப்பாசிரியர்). வவுனியா: சு.சிவபாலன், 40, வைரவ கோவில் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2002. (அச்சக விபரம் தரப்படவில்லை). 175 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22 x 15 சமீ.