15492 உதிராக் குரும்பட்டிகள்.

த.ரமேஸ். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (களுதாவளை: மாருதி அச்சகம்).

xx, 80 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-8715-83-3.

1983இல் பிறந்த இக்கவிஞர் திருப்பழுகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர். மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியில் பயின்று ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இத்தொகுதியில் புலமைப்பரிசில் பூதம், நிவாரணம், தேடல், கடந்து வா, கல்விப் புழுகு, நண்பனின் கடைசி மடல், மனுநீதி, உனக்காக, புதைந்த பொக்கிஷங்கள், ‘அ’ முதல், உயர்ந்தவர்கள், யார்?, எனக்குப் போதும், யாராயினும், தென்னை பல்கலைக்கழகம், செய்வது, கடவுளும் நம்பமாட்டார், நவீனன், பாலைப் பனி, மட்கியது, உண்மை, நீ மௌனியாய், அவதாரம், மானுடக் காதல், காலம் பக்கத்தில், சாதனை, ஜீவகாருண்யம், மனப்பகடை, கனடா கைக்குள், ஊமை ஓவியங்கள், உதிராக் குரும்பட்டிகள், அவமானம், விருப்பம்போல, ஏன், விபரீதப் படைப்பு, சுதந்திரம், சிதையும் மேகம், சீதனம், பாதிச் சாதி, மௌனம், எது என் கதாபாத்திரம், பெயர், தொழில் மாற்றம், கூண்டுக்குள், கொடுக்கேறும் காலம், எதைச் சொல்ல, நியாயம் கற்பிக்கப்பட, மானம், மறைமுகம், நீதி ஆகிய தலைப்புகளில் இக்கவிஞர் எழுதிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

9928 ஐரோப்பா தேச வரலாற்றுக் குறிப்புகள்: க.பொ.த.உயர் தரத்திற்குரியது.

 கார்த்திகேசன் கமலநாதன்.சாவகச்சேரி: தபனியா வெளியீட்டகம், தபனி வாசா, மீசாலை கிழக்கு, மீசாலை, 1வது பதிப்பு, பங்குனி 2009. (சாவகச்சேரி: ஆதவன் பக்க வடிவமைப்பு, ஐயா கடையடி, சாவகச்சேரி வடக்கு). xvi, 104 பக்கம், விலை:

15517 கடலோரத் தென்னைமரம்.

கவிமணி நீலாபாலன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). xviii,