15517 கடலோரத் தென்னைமரம்.

கவிமணி நீலாபாலன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்).

xviii, 116 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-0958-01-6.

ஜீவநதியின் இருபதாவது வெளியீடாக வெளிவந்திருக்கும் கவிதைத் தொகுதி. இலக்கண வழுவற்ற ஓசைநயம்மிக்க கவிதைகளைப் புனைவதில் நீலாபாலன் குறிப்பிடத்தக்கவர். காலத்தின் நடப்பியலை இவரது கவிதைகள் சமூக அக்கறையுடன் வெளிப்படுத்துகின்றன. இந்நூலில் இடம்பெறும் அக்கினிப் பாவலன் என்ற முதலாவது கவிதையே இவரது ஒட்டுமொத்த கவித்துவ வலிமையைப் புரிந்துகொள்ளப் போதுமானதாக இருக்கின்றது. வாழ்க்கைக் கலைக்கு என்னும் கவிதையில் ஆண்-பெண் இணைந்த வாழ்வின் பெருமையை கூறுகின்றார். பருந்துகள் என்ற கவிதையில் சமூகத்தில் வாழும் மனிதர்களின் குணங்களை அழகாய் விபரிக்கின்றார். இத்தகைய கவிச் செழுமைமிக்க அறுபது கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

14506 பரதநாட்டியம்: வாசிப்புத் துணை நூல்-தரம் 8.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: அழகியற் கல்வித்துறை, மொழிகள், மானுடவியல், சமூக விஞ்ஞானபீடம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2017. (மஹரகம: அச்சகம், தேசிய கல்வி நிறுவகம்). vii, 42 பக்கம், விளக்கப்படங்கள்,

14187 கந ;தபுராணச் சுருக்கம்.

த.குமாரசுவாமிப்பிள்ளை. யாழ்ப்பாணம்: த.குமாரசுவாமிப்பிள்ளை, ஆசிரியர், ஸ்ரீ இராமநாத வித்தியாலயம், 1வது பதிப்பு, 1948. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xii, 131 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ. கந்தபுராணம் 10345 செய்யுள்களைக் கொண்டது.