வேதா இலங்காதிலகம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, வைகாசி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
xiv, 128 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-0958-36-8.
கோப்பாயில் பிறந்து, டென்மார்க்கில் வசித்துவரும் திருமதி வேதா இலங்காதிலகம் அவர்கள் எழுதிய 74 கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. காலமாற்றத்தோடு கூடிய விடயங்களைத் தன் கவிதைகள் வாயிலாகப் பேசும் இவர் இயற்கை பற்றியும், தமிழ்மொழி பற்றியும் தான் படைத்த கவிதைகளைத் தனியாகப் பிரித்திருக்கிறார். நல்லதொரு சமுதாயத்தைத் தன் கவிதைகளின் வாயிலாக காணமுயலும் வேதாவின் தெளிவான சிந்தனைகளை இக்கவிதைகள் எளிமையாகத் தாங்கி நிற்கின்றன. எழுச்சிபெற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளைத் தன் கவிதைகளில் பகிர்ந்துகொள்ளும் அதே வேளை இயற்கையிமீது தான் கொண்ட ஆழமான ஈடுபாட்டையும் தன் கவிதை வரிகளில் காட்டிச் செல்கின்றார். இந்நூல் 148ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.