எஸ்.என்.எஸ். றிஸ்லி சம்சாட். கனடா: ஐங்கரன் கதிர்காமநாதன், படைப்பாளிகள் உலகம், இணை வெளியீடு, அட்டாளைச்சேனை -16: எஸ்.என்.எஸ். றிஸ்லி சம்சாட், 3, கிழக்கு வீதி, தைக்கா நகர், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172, மில் வீதி).
xviii, 49 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 17×12 சமீ., ISBN: 978-955-38606-0-6.
ஈழப் படைப்புகளுக்கு உரம் சேர்க்கும் உன்னதமான பெருநோக்கோடு களமிறங்கி, ஈழ இலக்கிய கன்னிப் படைப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் கனடா படைப்பாளிகள் உலகம் அமைப்பு அறிமுகம் செய்யும் அட்டாளைச்சேனை எஸ்.என்.எஸ். றிஸ்லி சம்சாட் அவர்களின் கன்னிக் கவி நூலாக ‘முகவரி” அமைகின்றது. வலி தாங்கிய எம் மண்ணில், எம் மொழிக்கு வலுச் சேர்க்கும் இவர் போன்றவர்கள், தங்களையும் வளர்த்துக்கொண்டு, தம் பின்னால் வருவோர்க்கும் கைகொடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பினையும் இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.