15606 மௌனம் எனும் பேரோசை.

அரியாலையூர் மாலினி மாலா. யாழ்ப்பாணம்: திறவுகோல் வெளியீட்டகம், நல்லூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

vii, 162 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14.5 சமீ.

யாழ்ப்பாணத்தில் பிறந்து கொழும்பில் கணக்கியல் துறையில் பணிபுரிந்து இப்பொழுது ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் மாலினிமாலாவின் தாய்நிலத்தின் மீதான காதலை இந்நூல் கவிதைகளாகத் தருகின்றன. தன் இள வயதில் அரியாலையூர் மாலினி சுப்பிரமணியம் என்ற பெயரில் இலக்கிய வானில் வலம் வந்தவர் இவர். சிறுகதைகள் விமர்சனங்கள், இலங்கை வானொலி நாடக நிகழ்ச்சிகள் என அறிமுகமான இவர் சிலகால அஞ்ஞாதவாசத்தின் பின்னர் வீரகேசரியில் முன்னர் தொடர்கதையாக வெளிவந்த நாவலுடன் இலக்கிய உலகில் அண்மையில் மீள் பிரவேசம் கண்டவர்.

ஏனைய பதிவுகள்

16882 சுடரொளி சம்பந்தன் 1935-2022.

குடும்பத்தினர்.   லண்டன் E7 8PQ: சுடரொளி வெளியீட்டுக் கழகம், 15, Rutland Road, 1வது பதிப்பு, ஜீன் 2022. (இலண்டன்: ஜே.ஆர். பிரின்ட், Hoe Street, London E17 4QR). 90 பக்கம்,