திருச்செல்வம் திருக்குமரன். சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ், 214, புவனேஸ்வரி நகர் 3வது மெயின் ரோடு, வேளச்சேரி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ்).
104 பக்கம், விலை: இந்திய ரூபா 130., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-881333-9-5.
மின்மினி வெளிச்சத்தில் அடரிருட்காட்டில் இலக்கடைவேன் என நம்பிக்கை மொழி சொல்லும் திருக்குமரன் கவிதைகள். இழப்பின் வலியை தீனமான குரலில் அல்ல பாரதிதாசன் போன்று கனத்த குரலில் பதிவிடுகிறார். வார்த்தைகள் துள்ளல் போட அழகாய் அமைந்த கவிதைகள். ஆற்றொழுக்கென தமிழ்நடை. போரின் தீவிரமும், உறவுகளை இழந்த துயரமும், தாய்மண்ணை பிரிந்த வலியும், இந்த கொடும் நினைவுகள் உருவாக்கும் தப்பிக்கவியலா தனிமையும் கவிதைகளின் ஊடுபாவாக உள்ளன. இவரின் மொழி நடையும் வார்த்தை தேர்வும் கவிதைக்கு தனித்தன்மை தருகின்றன. கவிதை வாசிப்பின் புதிய அனுபவத்தை தரும் இந்தத் தொகுப்பில் ‘கண்ணம்மா என்பது’ என்ற கவிதையில் தொடங்கி ‘நதி தீரம்’ என்ற கவிதை வரையான 72 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.