பா.இரமணாகரன் (புனைபெயர்: மாவையூர்க் கவி). அச்சுவேலி: பா.இரமணாகரன், சந்நிதி வீதி, இடைக்காடு, 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: அன்ரா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி). xii, 68 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978- 955-43539-3-0. காலில் தடுக்குப் பட்டு காலைப் பதம்பார்த்த ஒரு கல்லைக் குறிபார்த்து எறிந்து வயிற்றுப் பசியை மட்டுமல்லாது, நிகழவிருந்ததொரு களவையும் தடுத்து, பெண்ணின் தாலியையும் காத்த கந்தனின் திருவருளும், சும்மா கிடந்த கல்லை பிள்ளையாராக வடிவமைத்த சிற்பி அதனை எல்லோரும் வழிபடும் நிலையை அக்கல்லுக்கு ஏற்படுத்தியமையும், மறைந்திருக்கும் இறைவனை மனிதனால் மட்டுமே வெளிக்கொண்டுவர முடியும் என்றும் அதற்கும் அதற்குரிய படிமானமுள்ளவர்களால் மட்டுமே முடியும் என்ற செய்தியையும் உணர்த்தும் கதைகள் இவை. இக்கதைகள், கல், நான் பிரயோசனமானவன், கடவுள் ஏன் கல்லானார், விளையாட்டுப்போட்டி ஆகிய நான்கு தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன. பிள்ளைகளிடையே நற்போதனைகளை ஊட்டுவதுடன் ஆன்மீகச் சிந்தனையைப் பெருக்கும் வகையிலும் அமைந்துள்ளன.
Enjoy 10 pound deposit casino On the internet Book
Posts What exactly is Incredibox Chill as the Ice Mod:: 10 pound deposit casino Should i combine various other sound factors inside Chill While the