கனக.செந்திநாதன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1971. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).
பக்கம் 98-116, விலை: 75 சதம், அளவு: 20×14 சமீ.
வரதரின் பலகுறிப்பு என்ற உசாத்துணைப் பிரசுரத்தின் (தமிழ் டிரெக்டரி) நான்காவது தொகுதியில் இடம்பெற்ற இந்நூல்விபரப் பட்டியல் தனிப்பிரசுரமாகவும் (Off Print வெட்டுப் பிரசுரம்) கணிசமான பிரதிகள் வெளியிடப்பட்டிருந்தன. ஈழத்து தமிழ்நூற்பட்டியல் வரலாற்றில் ஆரம்பகால பிரசுரங்களைத் தந்தவர்களில் இரசிகமணி கனக.செந்திநாதனும் ஒருவர். இவர் 1955 முதல் 1970 வரையிலான குறிப்பிட்ட காலப்பகுதியில் இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களின்-குறிப்பாக இலக்கியம். சமயம் தொடர்பான விபரங்களை வகுத்துத் தொகுத்து பட்டியலிட்டிருந்தார். சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், பெரியோர் வரலாறு, கவிதைகள், சமயப் பாடல்கள், சிறுவர் நூல்கள், இலக்கிய கட்டுரைகள், சமயக் கட்டுரைகள், பிற நூல்கள், நாவலர் சம்பந்தமான நூல்கள் என குறிப்பிட்ட பிரிவுகளாக வகுத்து இந்நூற்பட்டியலை அந்நாளில் வெளியிட்டிருந்தார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 326).