க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, கார்த்திகை 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
30 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 29×21 சமீ.
‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 220ஆவது இதழாக 20.11.2023இல் வெளிவந்த இடர்காலச் சிறுகதைகள் சிறப்பிதழில் ஆங்கோர் காட்டிடைப் பொந்திலே (மலைமகள்), புதிய மனுசி (ஆதிலட்சுமி சிவகுமார்), உயிர்ப்பான உணர்வுகளோடு (விண்ணரசி), அவர்களுக்குத் தான் எமக்கு விடிவதில் விருப்பமில்லையே (கஸ்தூரி), அவர்களுக்காக அழுகிறோம் (சூரிய நிலா), விடியும் (சுதாமதி), தென்னம்பிள்ளை (தமிழவள்), இலட்சியங்கள் சாவதில்லை (தமிழ்க் கவி), சணல் 4 (வெற்றிச்செல்வி), ஆயுதத்தை மட்டுமல்ல (தமிழ்நிலா) ஆகிய தேர்ந்த சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பெண்கள் வலிமையற்றவர்கள் என்ற மூடத்தனமான நம்பிக்கையை சிலர் முன்வைக்கிறார்கள். அவர்களது நம்பிக்கையை தவிடுபொடியாக்கி, நமது பெண் போராளிகள் போர்முனைகளிலும், போராட்டக் களங்களிலும் செய்த வீரதீரச் செயல்களை இக்கதைகள் வாயிலாக ஆவணப்படுத்திவைக்க முயல்கின்றனர்.