17538 கார்மலி சொன்ன காதை.

அம்பலவன் புவனேந்திரன். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, மே 2023. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி). 

xii, 108 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-624-5849-36-9.

நீண்டகாலமாக மட்டக்களப்பிலிருந்து புலம்பெயர்ந்து, ஜேர்மனியின் ஒபஹவுசன் நகரத்தில்  வாழும் அம்பலவன் புவனேந்திரன் எழுதிய கவிதைகள் இவை. இக்கவிஞர் தனது கவிதைகளில் எமது மண்ணின் போர்க்கால சூழ்நிலைகளைப் பதிவுசெய்யும் அதே வேளை புலம்பெயர் தேசத்தவரின்; அவலங்களையும் பதிவுசெய்யத் தவறவில்லை. அம்பவலன் புவனேந்திரனின் கவிதைகள் வெறுமனே உணர்ச்சிபூர்வமான கவிதைகள் அல்ல. அவை உணர்வுபூர்வமானவை. வாழ்வின் யதார்த்தம் பேசுபவை. தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் ஊடகமாக  இவர் கவிதையையே தேர்ந்தெடுத்துள்ளார். இது மகுடம் வெளியீட்டகத்தின் 71ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Tragamonedas Casino Yahtzee Sin cargo 3d

Content Jugando A Tragamonedas Móviles De balde: Guía Breve ¡elige Su Favorita Tragamonedas Regalado 3d! Tercer Transito: ¡nacer En Participar A los Tragamonedas De balde